முதற் பக்கம்

காலம் பார்த்து

எனது மூத்த நண்பர் செல்வராஜ்குமார் தூத்துக்குடி வானொலிக்காக என்னிடம் ஒரு பாடல் எழுதச் சொன்னார். எழுதியபின் அவர் மெட்டமைத்து
வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் தொண்ணூறுகளில் ஒலிபரப்பானது இந்தப் பாடல்!


காலம் பார்த்து நேரம் பார்த்து நாத்துநட்டு பாத்திகட்டி
தண்ணிய ஊத்தி வளர விட்டு காத்துப்பாரு - பயிர்
விளஞ்சி வந்து களஞ்சியமே நிரம்பிடும் பாரு
சந்தோஷம் கொண்டாட வழிபொறந்திடும் பாரு

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 1:

நாட்டுக்குள்ள தரிசையெல்லாம்
நஞ்சைகளா மாத்தணுங்க
ஆத்துத்தண்ணி அளந்தெடுத்து
நிலத்துக்கெல்லாம் திருப்பணுங்க

நிலத்திலெல்லாம் பயிர்வளர்த்து செழிக்க விடணுங்க - இங்க
தரிசான இடத்தையெல்லாம் ஒழித்து விடணுங்க!

அது நடந்துவிட்டா பாலையெல்லாம் சோலைகளாகும்!
வரும் காலத்திலே பஞ்சமெல்லாம் பறந்தே போகும்!

                                                                                  (காலம் பார்த்து)

சரணம் 2:

தானியங்கள் காய்கறிகள்
நாளுக்குநாள் விளஞ்சிவந்தா
விலைவாசி குறைஞ்சிடுங்க
வாழ்க்கைத்தரம் உசந்துடுங்க

உலகத்துக்கே நம்நாடு வழியைக்காட்டணும் - இந்த
உலகத்துல நம்நாடு ஓங்கி வளரணும்!

இது நடந்துவிட்டா பூமி ஒரு சொர்க்கமாகும் !
நலம் பெறுவதெல்லாம் மாமனித வர்க்கமாகும்!

                                                                                  (காலம் பார்த்து)

* * * * *

ஒவ்வொரு சரணம் பாடும் போதும், ஒவ்வொரு வாத்தைக்குப்பின் ஹோய்... ஹோய்... என்ற கோரஸ் இந்தப் பாடலுக்கு அழகு சேர்த்தது!

அந்தச் சரணம் என் மனதில் ரீங்காரமிடுகிறது....

நாட்டுக்குள்ள ஹோய்... ஹோய்...  தரிசையெல்லாம் ஹோய்... ஹோய்...
நஞ்சைகளா ஹோய்... ஹோய்...  மாத்தணுங்க ஹோய்... ஹோய்... 

பாடலைப் பத்திரமாக வைத்திருக்க முடிந்தது. பாடலின் ஒலிப்பதிவுதான் என்னிடமில்லை!


-உதயகுமார் ஜே.ஆர்.

2 comments:

  1. Very nice Uday. This songs reminds me of one of the MGR songs - Vivasaayi Vivasaayi.. kadvaul ennum mudalaali.. I would like to hear the song. Do you have the audio version?

    ReplyDelete