முதற் பக்கம்

தேசம் எந்தன் தேசம்

ஒருமுறை செல்வராஜ்குமார் அவர்கள் என்னிடம் வந்து, "தம்பீ தேசபக்திப் பாடல் ஒண்ணு எழுதுறியா? ரெண்டு வாரத்தில ரெக்கார்டிங் பண்ணணும்."

அதற்கு நான் யோசித்துக்கொண்டே, "ரெக்கார்டிங்கா? எங்கேண்ணே?"


அவர், "திருநெல்வேலி ரேடியோ ஸ்டேஷனுக்காக ஒரு சான்ஸ் கெடச்சிருக்கு. நம்ம ஸ்கூல் புள்ளைங்கதான் பாடப் போறாங்க. எப்போ எழுதித் தர்றே?"


"ஒரு வாரம் டைம் குடுங்க. முயற்சி பண்றேன்."


"ஒரு வாரம் எல்லாம் டைம் இல்ல. ரெண்டு நாள்ல குடுக்குற!"

அன்றைய ஒரு மாலைப் பொழுதில் ஸ்பிக் நகர குடியிருப்பில் எனக்கு ஒதுக்கிஇருந்த வீட்டில் அமர்ந்து சிந்திக்க ஆரம்பித்தேன்.
இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தேன். மெட்டமைத்தார். அடுத்த வாரம் திருநெல்வேலி வானொலியில் தேசபக்திப் பாடல் பகுதியில் ஒலிபரப்பானது இந்தப்பாடல்!

 

* * *

தேசம் எந்தன் தேசம்
பழமை புதுமை கொண்ட எந்தன் தேசம் !
பேசும் புகழ் பேசும்
புவனமெல்லாம் அதன் புகழ் பேசும் !

பாரதமே எந்தன் பாரதமே - உனைப்
போற்றிடவே இந்தப் பா...ரதமே !


                                                                                (தேசம்)

 சரணம் 1:

சித்தனைக் கண்டது புத்தனைக் கண்டது
தத்துவம் சொன்னது எந்தன் தேசம் !
யுத்தமும் கண்டது வெற்றியைக் கொண்டது
ரத்தமும் சிந்திய எந்தன் தேசம் !

காலங் காலமாய் காத்துவரும் - நல்
பண்புகள் கொண்டது எந்தன் தேசம் !
ஆலயங்கள் பல அரண்மனைகள் உண்டு
சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !

சரித்திரம் சொல்லிடும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

சரணம் 2:

வானத்தில் கோள்களை ஏவிய நாள்களில்
விண்ணைத் தொட்டது எந்தன் தேசம் !
கணிப்பொறி ஏற்கும் கட்டளை இடுவதில்
வித்தைகள் கொண்டது எந்தன் தேசம் !

இனிவரும் நாளில் இன்னொரு கோளில்
இல்லங்கள் அமைத்திடும் எந்தன் தேசம் !
அறிவினிலே செயல் புரிவதிலே - தனிப்
பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !

பெருமைகள் கொள்ளும் எந்தன் தேசம் !
                                                                                (தேசம்)
 

உதயகுமார் ஜே.ஆர்.

2 comments:

  1. Uday. You seem to be very versatile. I like the Charanam 2 very much. Oru bharathiyin kavidai padiththa thirupthi..

    ReplyDelete