முதற் பக்கம்

உங்களில் ஒருவன்


தீர்ந்துபோன சனியும் ஞாயிறும்
திரும்பத் திரும்ப வரும் என்றே

தீராத வேட்கையில்
தூக்கம் கலைத்து

கண்களில் தேங்கிய
கனவைத் தொலைத்து

படுக்கை விடுத்துத்
திங்களைத் தொடுவோரில்...
                           உங்களில் ஒருவன்

திங்கள் முதல் வெள்ளி வரை
விடியல் முதல் மாலை வரை

கணினிகளின் திரைகளுக்கே

கண்களை ஒப்படைத்து

மூளைக்கும் விரல்களுக்கும்
களைக்கும் வரை பளுகொடுத்து

மென்பொருளில் மேய்கின்ற
ஜனத்திரள்களில்...
                          உங்களில் ஒருவன்

No comments:

Post a Comment