ஒவ்வொரு வாழ்வும் ஒவ்வொரு திசையில்
ஓய்விலாமலே செய்கிற பயணம் !
எவ்விதம் முடியும் எங்கே முடியும்
ஒவ்வொரு நெஞ்சும் கொள்வது சலனம் !
போகும் பாதையில் காண்பவர் யாரும்
சேரும் வரையில் வருவதுமில்லை !
வருபவர் யாரும் இன்னொரு திசையில்
வருவார் என்பது நிச்சயமில்லை !
நிச்சயம் இல்லாப் பொழுதுகள் மட்டும்
நித்தம் நித்தமும் பனியாய்க் கரையும் !
நித்தியமில்லாக் காட்சிகள் யாவும்
நீரில் கோலம் நெருப்பில் தாளம் !
இனியொரு சங்கமம் எங்கே என்பது
இலையுதிர்க்காலக் கனிபோல் தோன்றும் !
இனிமைப் பொழுதுகள் என்று வருமோ
எண்ணி எண்ணியே இளகிடும் உள்ளம் !
பழகிய வரையில் உத்தம நெஞ்சும்
விலகிய பொழுதில் கொட்டிய அன்பும்
வாழ்வோ ஏட்டில் எழுதிக்கொள்ளும் !
வாழும் நாட்களின் அழியாச் செல்வம் !
உதயகுமார் JR செப்டம்பர் 2008-ல் தென்றல் மாத இதழில் வெளியானது. |
இலையுதிர்காலக் கனிகள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment