முதற் பக்கம்

சைவர்களும் அசைவர்களும்

அசைவர்கள் ஏன் அசைவம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்? சைவர்கள் ஏன் சாப்பிடுவதில்லை?

இதற்கு எத்தனையோ முறையில் காரணங்கள் சொல்லலாம்.

உளவியல் அடிப்படையில் ஒரு விடை:

அசைவ உணவு தயாராகும் செயல்முறையை முன்பாதி பின்பாதி என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  • விலங்கை வதைத்தல் மற்றும் கொல்லுதல்
  • அது வலியால் துடித்தல்
  • அடுத்தடுத்து அது பச்சை மாமிசமாக சமையலறைக்கு வரும் வரை உள்ள விஷயங்கள்
இவை யாவும் முன்பாதி!

பின்பாதி என்பது,

  • உப்பு, மசாலா போன்ற மாமிசத்தின் தன்மையை மாற்றக்கூடிய பொருட்களைச் சேர்த்து சமைத்தல்
  • அதிலிருந்து வரும் வாசம்
  • சாப்பிடும் போது ஏற்படும் சுவை.

உளவியல் ரீதியாக, அசைவர்கள் விஷயத்தில், பின்பாதி மட்டுமே அவர்களின் மூளையில் ஓங்கி (predominant) இருக்கும்.
விலங்குகள் கொல்லப்படுவதையோ அதை சமைக்க ஆரம்பிக்குமுன் செய்யப்படும் தயாரிப்பு வேலைகள் எதையும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை.
சமைக்கப்பட்ட மாமிசத்தின் சுவை மட்டுமே அவர்கள் நினைவில் கோலோச்சும்!

சைவர்கள் விலங்குகள் கொல்லப்படுவதையோ கொல்லப்படும்போது அது வலியால் துடிப்பதையோ அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது நினைத்துப்பார்க்க விரும்புவதில்லை.
மாமிசத்தை உணவுக்காக தயார்செய்யும் செயல்முறைகள் பற்றி அவர்களின் மூளை சிந்திக்கத் தலைப்படுவதில்லை!

முன்பாதியைப் பற்றிய உணர்வு சைவர்களிடமும் பின்பாதியைப் பற்றிய உணர்வு அசைவர்களிடமும் ஓங்கி இருக்கும்.

•••


No comments:

Post a Comment