முதற் பக்கம்

சிறுவர் பாடல்

கலிஃபோர்னியா தமிழ்க் கழக ஆண்டுவிழாவில் தொடக்கப் பாடலாக பள்ளிச் சிறுவர்களால் பாடப்பட்டது.


பல்லவி:

அன்னை பூமியை விட்டுப் பறந்தோம்
ஆயிரமாயிரம் தொலைவு கடந்தோம்
அன்னிய பூமியில் காலடி வைத்தோம் - கை
பின்னிய படியே நட்புகள் சேர்ந்தோம்!

சரணம் 1:

அடுத்தவர் மண்ணில் வசித்து வந்தாலும்
அன்னையின் மொழியில் ஆர்வம் கொண்டோம்
தொன்னூற் றொன்பதில் ஈரைந்து பேருடன்
திண்ணை போலொரு பள்ளியைக் கண்டோம்!

விண்ணை முட்டும் விமானம் போலே
எண்ணம் இன்றோ ஆயிரம் மேலே!

சரணம் 2:

ஞாயிறு தோறும் தமிழைப் படித்து
ஞாயிறு போலே அறிவில் சிறப்போம்
தாய்களும் சேய்களும் கற்றுச் செல்லும்
இந்தப் பள்ளியும் ஆலயம் என்போம்

அறைகளில் துளிர்விடும் செடிகள் அல்ல
ஆலமரங்கள் நாங்கள் என்போம் !

உதயகுமார் J.R.

No comments:

Post a Comment