முதற் பக்கம்

இறைவனின் ஊடகங்கள்-3

(முதற்பகுதி இங்கே) 

நம்மைச் சுற்றியுள்ள பொருட்களே ஊடகமாக மாறுவதைப் பற்றிப் பார்க்கலாம்.

நாம்  நமது தினசரி வாழ்க்கையின் பெரும்பாலான நேரங்களில், ஐந்து புலன்களின் எல்லைகளுக்குள் வாழ்கிறோம்.

அவையே மனதின் இயக்கத்தை தங்கள் கட்டுக்குள்  கொண்டுவந்து விடுகின்றன.

இந்த ஐந்து புலன்களும் எதுவரை பயன்படுகின்றன என்பது அவற்றின் உபயோக எல்லைகளைத் தொடும்போது தெரிகிறது.

கண்கள் பார்க்க முடிகிற தூரம் ஓர் எல்லை.
காதுகள் கேட்க முடிகிற ஒலியளவு ஓர் எல்லை.
நாசிகளுக்கு நுகரும் திறன், நாவிற்குத் தெரிகிற சுவைகள், உடல் உணரக்கூடிய ஸ்பரிசங்கள் - இவை யாவும் வரம்புகளுக்கு உட்பட்டவையே!

நம் மனம் பரம்பொருளின் அதிர்வலைகளை உணரமுடியாத நிலையில் இருக்கும் போது, இறைவன் ஒரு விஷயத்தை நம்மிடம் உணர்த்துவதற்கு நாம் இருக்கும் எல்லைக்குள் உள்ள பொருட்களையே பயன்படுத்துகிறான்.

அந்நேரம் நமைச் சுற்றியுள்ள பொருள்களில் ஏதாவதொன்று இறைவனின் ஊடகமாக மாறிவிடுகிறது. அப்படிப் பார்த்தால் நம்மைச் சுற்றியுள்ள எந்த ஒரு பொருளும் ஓர் ஊடகமாக மாறக்கூடியதே!

ஒரு பொருள் வெறும் ஜடப்பொருளாக இருப்பதும் நாம் கவனிக்கும் போது அது ஒரு தகவல் பரிமாற்றச் சாதனமாக மாறுவதும் நம் அனுபவத்தில் நிகழக்கூடியவை.

இந்த அனுபவத்தை இறைவன் எளிதில் நிகழ்த்தி விடுகிறான், பல நேரங்களில் நாம் அறியாமலேயே...

அறியும் போது, இறைவனை உணர நமக்குச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இந்தச் சந்தர்ப்பங்களை உணர, உங்களின் மனதை திறந்து வைத்திருக்கிறீர்களா?



-உதயகுமார் ஜே.ஆர்.