முதற் பக்கம்

தமிழும் நாமும்

கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் ஆண்டு விழாவிற்காக எழுதிய பாடல் இது.

கர்நாடக இசைப் பாடகர் காயத்ரி சத்யா அவர்கள் பாடி சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அரங்கேற்றிய பாடல். இந்தப்பாடலைப் பெற்றுப் பயிற்சிக்கு ஆவன செய்த கவிதா செந்தில்குமாருக்கு என் நன்றிகளோடு...

காயத்ரி சத்யா அவர்கள் பாடிக் கொடுத்த ஒலி வடிவம் இந்த இணைப்பில் கேட்கலாம்.

ஞாயிறு என்றால் தமிழ்ப்பள்ளி !
திங்கள் முகமே வா துள்ளி !
செவ்வாய் திறந்து தமிழ்பேசு !
சொற்கள் சிறுசிறு பட்டாசு !

அறிவில் புதனாய் ஒளிவீச
கல்வி யாழமும் கைகூட
கண்டோம் இங்கொரு தமிழ்ப்பள்ளி !
காணக் கிடைக்கா விடிவெள்ளி !


-உதயகுமார் JR
மே 2010
கலிஃபோர்னியா தமிழ்ப் பள்ளி ஆண்டு விழா







1 comment: